ஈழநாட்டின் வன்னி இராச்சியத்தை ஆண்ட கடைசி மன்னன் என்ற புகழுக்குரிய மாவீரன் பண்டாரவன்னிய மன்னனின் வாழ்க்கை, மற்றும் அவருடைய காலத்தோடு தொடர்புடைய வரலாற்றுத் தகவல்களையும், தரவுகளையும் தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அண்மையில் கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் தொலைக்காட்சியான tvi இல் ஒளிபரப்பானது.
மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாறு குறித்தும், வன்னிப் பெருநிலம் குறித்தும் அறிந்தவற்றையும், அறியவேண்டியவற்றையும் சுவைப்படத் தொகுத்தளித்த அந்த நிகழ்ச்சி காணொளி வடிவில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.